முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அவசர சிகிச்சை பிரிவு..!! செயற்கை சுவாசம்..!! விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் சொன்ன தகவல்..!!

11:33 AM Nov 23, 2023 IST | 1newsnationuser6
Advertisement

விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும், தேவைப்படும் போது மட்டும் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினேன். விஜயகாந்துக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு இருமலும் தொடர் மூச்சு திணறலும் இருந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். அதற்காக சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதால் தேவைப்படும் போது செயற்கை சுவாசமும், மற்ற நேரங்களில் நல்ல முறையில் அவர் இருக்கிறார். விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்’’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags :
அமைச்சர் மா.சுப்பிரமணியன்சென்னைதேமுதிகவிஜயகாந்த்
Advertisement
Next Article