For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏப்ரல் 22ல் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்!... ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதாக ட்வீட்!

05:57 AM Apr 11, 2024 IST | Kokila
ஏப்ரல் 22ல் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்     ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதாக ட்வீட்
Advertisement

Elon Musk: உலக பணக்காரரும் எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வரும் 22ம் தேதி இந்தியா வரவுள்ளார்.

Advertisement

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளராகவும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார். இந்நிலையில், எலான் மஸ்க் வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் வலை தளப் பக்கத்தில், "இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை எலான் மஸ்க் சந்தித்து பேசியதும், அப்போது அவரிடம் 2024-ல் தான் இந்தியா வருவதாக எலான் மஸ்க் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Readmore: உஷார்!…ஹேர் கலரில் மறைந்திருக்கும் ஆபத்து!… என்ன தெரியுமா?

Advertisement