முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ELECTION | தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை..!

07:34 AM Apr 18, 2024 IST | Kathir
Advertisement

தமிழகத்தில் கடந்த 25 நாட்களாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில், சோதனையின்போது வெளியூரை சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்கி இருந்தது, தெரியவந்ததை அடுத்து அவர்களை உடனே வெளியேறும்படி சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் வெளியூர் நபர்கள் தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்தனரா என்று கேட்டறிந்த பிறகே, அரை ஒதுக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்தினரிடம் காவல்துறையினர் அறிவுறுத்தினர். நாளை காலை தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Lok Sabha Election 2024
Advertisement
Next Article