முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election | ’கட்சி தாவிய விஜயதரணி’..!! விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல்..!!

04:17 PM Mar 16, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விளவங்கோடு தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பதவி விலகியதால், இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் விளவங்கோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி மார்ச் 27ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதியும், திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதியும் கடைசி நாளாகும். வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Election Breaking | ‘சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பணம் எடுத்துச் செல்ல தடை’..!! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Advertisement
Next Article