For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தேர்தல் செலவின பார்வையாளர் எச்சரிக்கை...!

06:08 PM Apr 07, 2024 IST | Vignesh
அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தேர்தல் செலவின பார்வையாளர் எச்சரிக்கை
Advertisement

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தமிழ்நாடு தேர்தல் செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை.

தமிழ்நாடு தேர்தல் செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்றைய தினம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இருக்கக்கூடிய அம்மா மாளிகையில் இன்றைய தினம் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகள் அதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மற்றும் காவல்துறைக்கு பாலகிருஷ்ணன் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக சொல்லபடுகிறது.

Advertisement

தேர்தல் கண்காணிப்பு பணியில் மெத்தனமாக செயல்படுவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை பாயும் எனவும் பாலகிருஷ்ணன் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தேர்தல் செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று மணியிலிருந்து நான்கு மணி வரை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், சென்னையை சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் நடத்த சில நாட்களே இருக்கக்கூடிய நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து தற்போது வரை சென்னையில் பன்னிரண்டு கோடி ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது மிக மிக குறைந்த பணமாக இருப்பதாகவும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற எச்சரிக்கையை விடுத்து இருப்பதாக சொல்லபடுகிறது.

Advertisement