முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Electoral Bonds | தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.!

04:09 PM Mar 17, 2024 IST | Mohisha
Advertisement

பாரதிய ஜனதா கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரம் இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் எனக் கூறியது. மேலும் 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் 2024 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வரை எஸ்பிஐ வங்கியால் விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களை பற்றிய தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் 2024 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வரை வினியோகிக்கப்பட்ட 22,000 அதிகமான தேர்தல் பத்திரங்களை பற்றிய தகவல்களை உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து இந்த தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்பாக 15 மாதங்களில் 4362 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியுதவி செய்வது தொடர்பான புதிய தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்துள்ளது. இந்த தகவல்களை எஸ்பிஐ வங்கி சீல் செய்யப்பட்ட கவரில் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் தரவுகள் 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தரவுகள் என நம்பப்படுகிறது.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் புதிய தரவுகள் ஏப்ரல் 12, 2019க்கு முன் விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய தகவல்களாகும். இதில் தேசிய அரசியல் கட்சிகள் மாநில கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சிகளை பற்றிய நிதி விவரங்கள் மற்றும் நன்கொடைகளும் இடம் பெற்று இருக்கிறது.

Advertisement
Next Article