முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election | விளவங்கோடு இடைத்தேர்தல்..!! அதிமுக வேட்பாளராக ராணி அறிவிப்பு..!!

11:58 AM Mar 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 33 மக்களவை தொகுதிகளில் நேரடியாக அதிமுக போட்டியிடுவதாக அறிவித்தார். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவித்தார்.

விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Read More : BREAKING | 1-9ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்.12இல் நிறைவு..!! ஏப்.13 முதல் கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Advertisement
Next Article