Edappadi Palaniswami | அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது..!! இதுதான் எங்கள் முழக்கம்..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. திமுக தலைமையில் ஏற்கனவே உள்ள கூட்டணி இந்த தேர்தலிலும் களம் இறங்குகிறது. இதில் இந்திய ஜனநாயகக் கட்சி மட்டும் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிகிறது.
அதிமுகவை பொறுத்தவரை பொறுமையாகவே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை பணிகளைக் கையாண்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி, எஸ்.டி.பி.ஐ போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன. பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே விஷம கருத்துகளை பரப்பி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் விரைவில் வரும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி குறித்து அறிவிப்போம்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வென்று தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிப்பார்கள். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் பிரச்சாரம் இன்று முதல் தொடங்கிவிட்டது. தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம் என்பது அதிமுகவின் தேர்தல் முழக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary : Election campaign of AIADMK has started