For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'ஜெயிக்க பிறந்தவர் எடப்பாடியார்’..!! குடும்பத்துடன் அக்னி சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு..!!

02:51 PM Apr 10, 2024 IST | Chella
 ஜெயிக்க பிறந்தவர் எடப்பாடியார்’     குடும்பத்துடன் அக்னி சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு
Advertisement

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு, தனது குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி செட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கஞ்சா கருப்பு, “எடப்பாடி பழனிசாமி ஐயாவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததே பெரிய விஷயம். நடைபெற இருக்கின்ற எம்.பி. தேர்தலில் அதிமுகவினர் எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி குடும்பத்துடன் அக்னிச்சட்டி பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளேன். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெற்றி பெற வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டால் தானே நடக்கும்.

எதிர்க்கட்சிகள் பாதந்தாங்கி பழனிசாமி என விமர்சிப்பது, காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள். ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஐயா தலைமையிலான அதிமுகவினர் என்றைக்கும் ஒற்றைப் பரம்பரைதான். தனித்து நின்று ஜெயித்துதான் பழக்கம். கூட்டணி அமைத்து நின்று பழக்கம் இல்லை. என்றைக்கும் எடப்பாடி எடப்பாடிதான்" என்று தெரிவித்துள்ளார்.

Read More : BREAKING | தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகள் மூடல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Advertisement