For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிகாலையில் அதிர்ச்சி..!! 32 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..!! படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம்..!!

06:58 AM Mar 21, 2024 IST | 1newsnationuser6
அதிகாலையில் அதிர்ச்சி     32 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை     படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம்
Advertisement

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களையும், மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் என மொத்தம் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 5 விசைபிடிப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, இரண்டு விசைப்படகுகளுடன் 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், வெவ்வேறு கடற்பரப்பில் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரு படகின் எஞ்சின் பழுதால், தமிழக மீனவர்களின் படகுகளை கரைக்கு கொண்டு செல்ல இயலாததால், எத்தனை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், எத்தனை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற குழப்பம் நீடிக்கிறது.

Read More : நடுரோட்டில் இறங்கி சண்டையிட்ட ’சுந்தரா டிராவல்ஸ்’ பட நடிகை ராதா..!! சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகார்..!!

Advertisement