முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இத நான் எதிர் பார்க்கவே இல்ல.. ஷூட்டிங்ல பாலா எங்கிட்ட இப்படி நடந்துகிட்டாரு..!! - நடிகை ரோஷினி பிரகாஷ்

08:08 PM Oct 14, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் நாயகி ரோஷினி பிரகாஷ் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

Advertisement

அவர் கூறுகையில், "பாலா - மமிதா பைஜு விவகாரம் எனக்கு தெரியாது. ஆனால் வணங்கான் ஷூட்டிங் எனக்கு நல்லபடியாக அமைந்தது. என்னை ரொம்பவே வசதியாக ஷூட்டிங்கில் உணர வைத்தார். மேலும் ஒரு ஃப்ரெண்டை போலத்தான் என்னுடன் பழகினார். ஷூட்டிங்கிற்கு நான் வந்தவுடன் ஸ்க்ரிப்ட்டை என்னிடம் கொடுத்துவிடுவார். அது எனக்கு புரிவதற்கு வசதியாக தங்கிலீஷில் இருக்கும்.

ஏதேனும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தால் நேரடியாக அவரிடமே பேசுவேன். கேட்பேன். அப்போது அவர் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்குவார். எனக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்தார். நடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் அதற்கான நேரத்தையும் கொடுப்பார். நடிப்பில் வித்தியாசம் காட்டவா என்று கேட்டால், ஒரு முறை செய்து காட்டு என்று சொல்வார். அவருக்கு அது பிடித்திருந்தால் ஓகே என்பார். பத்து கதாபாத்திரங்கள் என்றாலும் அவர்களது உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அவருடன் பணியாற்றியது மாஸ்டர் கிளாஸ்தான்" என்றார்.

Read more ; அப்படி போடு.. நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் ரத்து.. குஷியில் வாகன ஒட்டிகள்..!! தேர்தல்தான் காரணமா?

Tags :
இயக்குநர் பாலாரோஷினி பிரகாஷ்வணங்கான்
Advertisement
Next Article