For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Heavy Rain | நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

Due to heavy rain, the District Collector has ordered holiday for schools in 4 talukas of Nilgiri district.
08:11 AM Jul 22, 2024 IST | Mari Thangam
heavy rain   நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை   மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Advertisement

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூா், பந்தலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக உதகை, குந்தா, கூடலூா், மற்றும் பந்தலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனா்.

Read more ; இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!!  பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Tags :
Advertisement