ஒரு வாரத்திற்கு மட்டும் இதை குடித்துப் பாருங்க..!! குடல் புண் காணாமல் போய்விடும்..!!
01:10 PM Jan 19, 2024 IST | 1newsnationuser6
Advertisement
உடல் ஆரோக்கியத்திற்கு 3 வேலை உணவு மிகவும் அவசியம். ஆனால், இந்த இயந்திர உலகில் உணவு உண்ண கூட நேரம் இல்லாமல் பலரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடுகிறது. இதனால் குடலில் புண் உண்டாகி அவை தாங்க முடியாத வேதனையை கொடுக்கிறது. குடலில் புண் பாதிப்பு ஏற்பட்டால் வயிறு எரிச்சல், குமட்டல், மலம் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படும். எனவே, இந்தப் பதிவில் குடல் புண்ணை ஆற்ற வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய பானம் குறித்து பார்ப்போம்.
Advertisement
தேவையான பொருட்கள்
* தேங்காய் பால்
* கற்றாழை ஜெல்
* தேன்
செய்முறை :
- முதலில் ஒரு மூடி தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் நன்கு அரைபட்டு பாலாக வந்த பின்னர் அதில் 3 அல்லது 4 கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து காலை நேரத்தில் பருகவும். இவ்வாறு செய்யத் தொடங்கிய சில நாட்களில் குடலில் உள்ள புண்கள் அனைத்தும் ஆறிவிடும்.