For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"அல்சர் தொல்லையா கவலை வேண்டாம்.." வீட்டில் இருக்கும் இந்த பொருட்களைக் கொண்டே சரி பண்ணலாம்.!

05:50 AM Nov 20, 2023 IST | 1Newsnation_Admin
 அல்சர் தொல்லையா கவலை வேண்டாம்    வீட்டில் இருக்கும் இந்த பொருட்களைக் கொண்டே சரி பண்ணலாம்
Advertisement

மாறிவரும் இயந்திர வாழ்க்கையில் மனிதர்களை பெரும்பாலும் தாக்குகின்ற நோய்களில் முக்கியமான ஒன்று அல்சர் என்னும் குடல் புண். வேலை பளு மற்றும் அழுத்தமான சூழ்நிலைகள் காரணமாக உணவு உண்பதை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவு தான் அல்சர்.

Advertisement

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. பணம் சம்பாதிப்பது வாழ்க்கையில் தேவையான ஒன்று என்றாலும் குறித்த நேரத்தில் நமது உணவுகளை நேரம் தவறாமல் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியதாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும் இருக்கிறது.

தொடர்ந்து உணவு சாப்பிடுவதை தவிர்த்து வருவதால் அல்சர் ஏற்படுகிறது. இந்த அல்சரை கவனிக்காமல் விட்டால் அது இறப்பை மற்றும் குடலில் புற்று நோய்கள் வருவதற்கும் காரணமாக அமையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வயிற்றுப் புண்ணை எளிய ஒரு உணவின் மூலம் சரி செய்யலாம்.

இதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக பொடி செய்து ஒரு டம்ளர் மோரில் கலக்கி சிறிது இந்துப்பு போட்டு குடித்து வர அல்சர் குணமாகும். இது அல்சரை குணப்படுத்துவதோடு உடலுக்கும் குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்றாகும். மேலும் அஜீரணக் கோளாறையும் குணப்படுத்தக் கூடியது.

Tags :
Advertisement