முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கண் திருஷ்டி போகணுமா? அப்போ நவதானிய ஆரத்தி முறையை ஃபாலோ பண்ணுங்க..!

06:00 PM Apr 19, 2024 IST | Baskar
Advertisement

சிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒருவரின் முன்னேற்றத்தைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொள்வதே கண் திருஷ்டியாக கருதப்படுகிறது.

Advertisement

கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. கண் திருஷ்டியை போக்க வீடுகளில் சிலர் திருஷ்டி பொம்மைகளையும், பூசணிக்காயையும் பயன்படுத்துவார்கள். ஆனால், நம் முன்னோர்கள் கண் திருஷ்டியை போக்க நவதானிய ஆரத்தி முறையை கடைபிடித்து வந்துள்ளனர். அது இந்த நவீன காலத்திலும் பின்பற்றப்படுகிறது. கண் திருஷ்டி என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதனும் நடுங்கி போவான்.காரணம் ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றும் சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு என்று சொல்வார்கள். எதிலும் போட்டி பொறாமை ஏற்படுவதால் அவை கண் திருஷ்டியாக மாறி விடுகிறது. இதனால் கோடீஸ்வரன் கூட தெருக்கோடிக்கு வந்துவிடுவார்கள் என்று சொல்வார்கள். இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து தப்பிக்க நவதானியத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும். அதாவது ஒரு அகலமான தட்டில் நவதானியம் ஒரு கப் அளவு கொட்டிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம்,சிறிது குங்குமம் சேர்த்து கலந்து விடவும். பிறகு ஒரு வெற்றிலையை கிள்ளி போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நவ தானியத்தை கலந்து விட்டால் நவதானிய ஆரத்தி ரெடி ஆகிவிடும்.

இந்த நவதானிய ஆரத்தி மேல் ஒரு வெற்றிலை வைக்கவும்.பிறகு அதன்மேல் இரண்டு கற்பூரம் வைத்து பற்ற வைக்கவும். வீட்டில் உள்ள அனைவரையும் நிற்க வைத்து இடமிருந்து வலம் மற்றும் வலமிருந்து இடம் என்று 8 முறை ஆரத்தி சுற்றி தெருவோரத்தில் நவதானிய ஆரத்தியை கொட்டி விடவும்.இவ்வாறு மாதம் ஒருமுறை செய்து வந்தால் கண் திருஷ்டி முழுமையாக ஒழியும்.

Read More: வாக்களித்துவிட்டு வந்ததும் பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்..!!

Advertisement
Next Article