For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கருப்பு நிற ஆடையை ஏன் அணியக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா..? ஜோதிடம் என்ன சொல்கிறது..?

According to Hindu Shastra, no matter what auspicious things are happening in the house, black clothes should not be worn.
05:20 AM Jul 04, 2024 IST | Chella
கருப்பு நிற ஆடையை ஏன் அணியக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா    ஜோதிடம் என்ன சொல்கிறது
Advertisement

இந்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும், கருப்பு ஆடை அணியக்கூடாது என்று சொல்வார்கள். வேறு எந்த நிறத்திற்கும் இது போன்ற அச்ச உணர்வு இருக்காது. ஆனால், கருப்பு நிறத்திற்கு மட்டும் ஏன் அப்படி கூறுகிறார்கள் தெரியுமா..?

Advertisement

ஏனென்றால், சனி பகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு என்பதாலும், கருப்பு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று நம்படுவதாலும் கருப்பு நிறம் அசுபமாக பார்க்கப்படுகிறதாம். மேலும், கருப்பு நிறம் காளி தேவியை குறிக்கிறது. காளியின் தாக்கத்தால் அமாவாசை இரவு இருள் சூழ்ந்துவிடும் என்பது ஐதீகம். இதனால் வாழ்க்கையில் அவர் அனைத்து வண்ணங்களையும் நீக்கி கருமையை கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

இதனாலேயே கருப்பு நிறம் அசுபம் என சொல்லப்படுகிறது. நல்ல நாட்களில் கருப்பு நிற ஆடை அணிவதால் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து அந்த சுபம் கெட்டதாக ஆகிவிடும் என்ற அச்சத்தால் இந்து மதத்தில் கருப்பு நிறத்தை அசுபம் என்று கூறுகின்றனர்.

பொறுப்பு துறப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியான நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டவையே.

Read More : ஆசிரியர்களுக்கே இந்த பிரச்சனையா..? அப்படியென்றால் மாணவர்களின் கதி..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
Advertisement