முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் யார் தெரியுமா..? மாநாடு முடிந்ததும் விஜய் சொன்ன அந்த வார்த்தை..!!

Information has been released about the woman who hosted the Tamil Nadu Success Club conference.
08:37 AM Oct 28, 2024 IST | Chella
Advertisement

விஜய் அரசியல் களத்திற்குள் வந்துவிட்ட நிலையில் அவர் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வெற்றிக்கரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பிரமாண்டமாக நேற்று (அக்டோபர் 27) நடந்த இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடினர். மதியம் 4 மணிக்கு மேல் தான் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதுப்படம் ரிலீசானது போல காலை 6 மணிக்கே மாநாடு நடைபெறும் இடத்துக்கு கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் படையெடுத்தனர். இதனால் மதிய நேரத்துக்குள் 90 சதவிகித இருக்கைகள் நிரம்பியது. இதனால், மாநாட்டு நிகழ்வுகளை சொன்ன நேரத்திற்கு முன்பாக தொடங்கி சொன்ன நேரத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டது.

மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் யார்..?

இப்படியான நிலையில், தவெக மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். யார் அவர் என்ற கேள்வியெல்லாம் எழுந்தது. இந்நிகழ்வை தொகுத்து வழங்கிய அப்பெண்ணி பெயர் துர்கா தேவி. இவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாநாடு முடிவுற்ற பிறகு துர்காதேவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தளபதி விஜய்க்கு இருக்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவர்.

தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டத்தில் பிறந்து என்றைக்காவது ஒருநாள் விஜய்யை பார்த்துவிட மாட்டோமா என ஏங்கியவர்களில் நானும் ஒருவர். அவரைப் பார்த்து ஒரே ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியமாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மேலாக எனக்கு கடவுள் செட் பண்ணி இந்த மாதிரி ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு வாய்ப்பு அமைய முதலில் எனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முழு ஆதரவு அளித்து உற்சாகப்படுத்தினார்கள்.

அடுத்ததாக இந்த வாய்ப்பு கிடைக்க முயற்சி செய்ததே என்னுடைய அண்ணன் தான். அடுத்ததாக என்னுடைய கணவர் மற்றும் என் குடும்பத்தினர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநில மாநாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களுக்கும், தளபதி விஜய் அவர்களுக்கும், ரொம்ப ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய உணர்வை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. ஏதோ கனவில் இருந்து வந்த மாதிரி உள்ளது. தளபதி விஜய் மேல் தீராத காதல். அண்ணன் என்ற அவர் மீதான உணர்வு நாடி, நரம்பு எல்லாம் பதிந்துள்ளது.

அதன் வெளிப்பாடாக வரும் கண்ணீரை விஜய்யின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். இதுக்கு மேல வாழ்க்கையில பெரிய வாய்ப்பு இருக்கான்னு eனக்கு தெரியல. நான் வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். தளபதி ரசிகையா நான் ஜெயித்து விட்டேன் என்பதை கெத்தாக சொல்வேன். மாநாட்டை தொகுத்து வழங்குவதில் கொஞ்சம் பதற்றம் இருந்தது. தளபதிக்காக என்னுடைய தமிழ் வார்த்தையை பதிவு செய்ய வேண்டும் என நினைத்தது நடந்ததற்கு தமிழன்னைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் "சூப்பர் மா.. நல்லா பண்ணீங்க" என விஜய் சொன்னாரு" என துர்கா தேவி மனநிறைவோடு தெரிவித்துள்ளார்.

Read More : “எங்களை நம்பி வருவோருக்கு நிச்சயம் இது கிடைக்கும்”..!! கூட்டணிக்கு அழைப்பு விடுத்த விஜய்..!!

Tags :
அரசியல்தமிழக வெற்றிக் கழகம்மாநாடுவிஜய்
Advertisement
Next Article