முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”மலைகளை குடைந்து தான் சாலைகள் அமைக்க வேண்டுமா”..? சீமான் பாய்ச்சல்..!!

07:02 AM Apr 10, 2024 IST | Chella
Advertisement

பெரிய முதலாளிகளின் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே சேலம் 8 வழிச்சாலையை போட பாஜக துடிப்பதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமாருக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓமலூர் அண்ணா சிலை அருகே பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”சாதி மதம், கடவுளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவன் நாட்டை பற்றியோ நாட்டு மக்களின் நலன் பற்றியோ சிந்திக்க மாட்டான்.

சேலம் 8 வழிச்சாலை கேட்டு பொதுமக்கள் யாரும் போராடவில்லை. பெரிய முதலாளிகளின் கட்டுமான பொருட்களை விரைவாக எடுத்துச் செல்லவே மத்திய அரசு 8 வழிச்சாலை போட துடிக்கிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ளது போன்று பெரிய தூண்களை அமைத்து 8 வழி அல்லது 9 வழிச் சாலைகள் கட்டிக் கொள்ளலாம். ஆனால், மலைகளை குடைந்து சாலை அமைத்து காரில் விரைவாக செல்லலாம் என்பது முட்டாள்தனமானது” என்றார்.

Read More : சந்தன மரத்தை விற்றது என் தந்தை என்றால் அதை வாங்கியது யார்..? வீரப்பன் மகள் வித்யா ராணி உருக்கம்..!!

Advertisement
Next Article