For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! 2 வருஷம் ஜெயில் உறுதி..!!

07:10 AM Apr 17, 2024 IST | Chella
இன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க     2 வருஷம் ஜெயில் உறுதி
Advertisement

தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பிறகு சமூகவலைதளங்கள் மூலம் வாக்கு சேகரித்தால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப். 17) மலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை உள்ள தேர்தல் விதிமுறைகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.

இந்த விதிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. ஊடகங்கள், முகநூல், வாட்ஸ் அப், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.

இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். விடுதிகள், வீடுகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர் பங்கேற்கவோ கூடாது. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், ஏப். 17 அன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

இசை மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகள், திரையரங்குகள் வாயிலாக பிரசாரம் செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More : நீங்கள் கடன் இல்லாத வாழ்க்கை வாழ இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க..!! மறந்துறாதீங்க..!!

Advertisement