தீபாவளி பண்டிகை..!! போனஸ் அறிவிப்பு..!! யாருக்கு தெரியுமா..? தமிழ்நாடு அரசு குட் நியூஸ்..!!
10:40 AM Nov 09, 2023 IST
|
1newsnationuser6
Advertisement
இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
Advertisement
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை பரிசாக 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே தற்காலிக தொகுதி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத்தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் பணியாற்றும் சுமார் 49,002 ஊழியர்களுக்கு 23 கோடி ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Next Article