முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’தொண்டர்கள் பிரிந்து கிடப்பது கட்சிக்கு நல்லதல்ல’..!! ’விரைவில் சசிகலாவுடன் சந்திப்பு’..!! ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!!

O. Panneerselvam has said that all necessary steps for the AIADMK merger will begin soon.
04:14 PM Jul 01, 2024 IST | Chella
Advertisement

அதிமுக இணைப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் தொடங்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisement

முன்னதாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம். ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே என்னும் கழக நிறுவனர், எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்.

நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக இணைப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் தொடங்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக இணைப்புக்காக உரிய நேரத்தில் சசிகலாவை சந்திப்போம் என்ற அவர், தொண்டர்கள் பிரிந்து கிடப்பது, கட்சிக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக இணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ‘வன்முறை செய்கிற இந்துக்கள்தான் பாஜகவினர்’..!! பிரதமர் மோடி, அமித்ஷாவை விளாசிய ராகுல் காந்தி..!!

Tags :
ADMKஎடப்பாடி பழனிசாமிஓபிஎஸ்சசிகலா
Advertisement
Next Article