For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக‌ மாவட்ட ஆட்சியர்...! தேர்தல் அதிகாரி புகார் மீது நடவடிக்கை...!

05:32 AM Apr 13, 2024 IST | Vignesh
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக‌ மாவட்ட ஆட்சியர்     தேர்தல் அதிகாரி புகார் மீது நடவடிக்கை
Advertisement

திமுக வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பாக நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Advertisement

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக‌ நீலகிரி மாவட்ட ஆட்சியர் செயல்படுவது தொடர்பாக உதவி செலவினப் பார்வையாளர் அனுப்பிய புகாரை நாங்கள் இன்னும் பெறவில்லை. இது தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளோம்” என்று கூறினார்.

மாநிலத்தில் உள்ள 4.36 கோடி வாக்காளர்களுக்கு பூத் சிலிப்களை அதிகாரிகள் விநியோகித்துள்ளதாகவும், மீதமுள்ள வாக்காளர்களுக்கு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் சீட்டுகளை விநியோகம் செய்து முடிப்பதாகவும் சாஹூ கூறினார். புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் 6,000 கார்டுகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

திருச்சியில் தபால் வாக்குப்பதிவுக்கான மாநில அளவிலான ஒருங்கிணைந்த மையத்தை நிறுவியுள்ளதாக கூறினார். அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தபால் வாக்குகள் விநியோகிக்கப்படும். ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதில், வருமான வரித்துறையினர் மாநிலத்தில் இதுவரை 74 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags :
Advertisement