முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மீண்டும் பேரழிவு..!! தீவிரமடையும் பறவைக் காய்ச்சல்..!! சாதாரணமா இருக்காதீங்க..!! எச்சரிக்கும் WHO..!!

10:48 AM Apr 19, 2024 IST | Chella
Advertisement

உலக சுகாதார நிறுவனம் H5N1 பறவைக் காய்ச்சல் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு பரவுவது குறித்த தனது கவலையை தெரிவித்துள்ளது.

Advertisement

பறவை காய்ச்சல் மனித இனம் எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய கவலை என ஐ.நா சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி ஜெர்மி ஃபரார் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கிய பறவைக் காய்ச்சல் பரவல் பல்லாயிரக்கணக்கான கோழிகளின் இறப்பிற்கு காரணமாக இருந்தது. மேலும், இந்த காய்ச்சலால் காட்டுப் பறவைகள், நிலப் பாலூட்டிகள் மற்றும் கடல் பாலூட்டிகளும் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் பசுக்கள் மற்றும் ஆடுகள் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த விலங்கினங்கள் இதற்கு முன்பு பறவை காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. H5N1 திரிபு உலகளாவிய ஜூனோடிக் விலங்கு தொற்றுநோயாக உருவாகி இருக்கிறது என ஃபாரார் கூறியிருக்கிறார். நிச்சயமாக பெரும் கவலை என்னவென்றால், வாத்துகள் மற்றும் கோழிகள் ஆகியவற்றை தாக்கிய இந்த வைரஸ் பாலூட்டிகளை தாக்கத் தொடங்கியது.

இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதர்களை தாக்குவதோடு ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவவும் தொடங்கியுள்ளது. நீங்கள் பாலூட்டிகளின் மக்கள் தொகைக்குள் வரும் போது மனிதர்களை நெருங்குகிறீர்கள். இந்த வைரஸ் புதிய ஹோஸ்ட்களைத் தேடுகிறது என ஃபரார் எச்சரித்துள்ளார். இது சமூகத்திற்கு மிகப்பெரிய கவலை எனவும் வேதனை தெரிவித்துள்ளார். மனித நோய்த்தொற்றுகளின் அளவைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பின் அவசியத்தை ஃபரார் வலியுறுத்தியுள்ளார். ஏனெனில், இங்குதான் வைரஸின் பரவல் பெரும்பாலும் நிகழ்கிறது.

இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்த அவர், ஒருவர் பறவை காய்ச்சல் நோயால் இறந்து விட்டால் அது முடிந்துவிடும். ஆனால், நீங்கள் இந்த சமூகத்தில் மற்றவர்களுக்கு இந்த காய்ச்சலை பரப்பினால் பறவை காய்ச்சலின் புதிய சுழற்சியை தொடங்குகிறீர்கள் என்று எச்சரித்துள்ளார். மேலும், தடுப்பூசிகள் சிகிச்சைகள் மற்றும் நோயை விரைவாக கண்டறிவதன் மூலம் பறவை காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் என ஃபரார் வலியுறுத்தினார்.

Read More : இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள சூப்பர் ஹிட் படங்கள்..!! இது செம த்ரில்லர் படம்..!!

Advertisement
Next Article