For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரையாண்டு தேர்வு விடுமுறை.! அரசாணை வெளியிட்ட தனியார் பள்ளிகள் இயக்குனர்.! அதிர்ச்சியில் நிர்வாகம்.!

06:10 AM Dec 23, 2023 IST | 1newsnationuser4
அரையாண்டு தேர்வு விடுமுறை   அரசாணை வெளியிட்ட தனியார் பள்ளிகள் இயக்குனர்   அதிர்ச்சியில் நிர்வாகம்
Advertisement

தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் விடப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் இந்த மாதம் பள்ளிகளுக்கு அதிகமான விடுமுறைகள் விடப்பட்டிருந்தது. இதனை ஈடு செய்வதற்காக அரையாண்டு தேர்வு விடுமுறையிலும் பல தனியார் பள்ளிகள் இயங்க இருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளின் இயக்குனர் இன்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து தனியார் பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதி திறக்கலாம் என தெரிவித்து இருக்கிறார். பல தனியார் பள்ளிகள் விடுமுறைகளை ஈடு செய்வதற்காக அரையாண்டு தேர்வு விடுமுறையிலும் செயல்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளின் இயக்குனர் அரசாணையை வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement