For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"இயக்குனர் மணிரத்தினத்தால் வாழ்க்கையே நாசமா போச்சு…" பிரபல சினிமா தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு.!

07:32 AM Nov 21, 2023 IST | 1Newsnation_Admin
 இயக்குனர் மணிரத்தினத்தால் வாழ்க்கையே நாசமா போச்சு…  பிரபல சினிமா தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்தினம். பன்லவி அணு பல்லவி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் மௌன ராகம், பகல் நிலவு, இதய கோயில், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய் குரு என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்.

Advertisement

சமீபத்தில் கூட கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிட்டார். இந்தத் திரைப்படம் பொருளாதார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் கமல்ஹாசன், துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து மிகப்பெரிய பட்ஜெட் ஒன்றில் படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவர் மணிரத்தினம் தனது வாழ்க்கையே நாசமாக்கி விட்டதாக, குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் மாணிக்க நாராயணன். இவர் மணிரத்தினம் தனது வாழ்வையும் எதிர்காலத்தையும் நாசமாக்கியதாக பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. மணிரத்தினம் நினைத்திருந்தால் எனக்கு பணம் கொடுத்து உதவி இருக்கலாம் ஆனால் அவர் என்னை கண்டு கொள்ளாமலே விட்டு விட்டார். இதனால் தனது வாழ்க்கை அதல பாதாளத்திற்கு சென்றது என தெரிவித்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டு சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement