முழு வீச்சில் தயாராகும் டிஜிட்டல் பிரச்சார வாகனங்கள்..!! குவியும் ஆர்டர்களால் திணறும் நிறுவனங்கள்..!!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை சந்திக்க வேட்பாளர்கள் மட்டுமல்ல டிஜிட்டல் பிரச்சார வாகனங்களும் முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
ஒருபுறம் கட்சித் தலைவர்களின் பிரச்சாரங்கள் வேட்பாளர்களுக்கு வலு சேர்த்தாலும், நேரடி வாக்கு சேகரிப்பே வேட்பாளர்களுக்கு வெற்றியை பெற்று தரும். நவீன காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் பிரச்சார வாகனங்களை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். இந்த பிரச்சார வாகனங்களை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன. சுயேட்சை வேட்பாளர் முதல் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வரை அவர்கள் கேட்கும் வசதிகளோடு பிரச்சார வாகனங்களை தயார் செய்து கொடுக்கின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இப்போது ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனங்கள் கூறுகின்றன. விளம்பர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்,
வேட்பாளர்கள் கேட்கும் வசதிகளுடன் டிஜிட்டல் பிரச்சார வாகனங்களை தயார்படுத்தி தருகின்றன. இன்னும் சில நாட்களில் மெய்நிகர் தொழில்நுட்பத்தோடு பிரச்சார வாகனங்கள் தயாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். வேட்பாளர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கூட இந்த பிரச்சார வாகனங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
Read More : Election Breaking | தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரம்..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!