முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சுவிஸ் பேங்கில் ரூ.60 கோடி எடுத்தாரா இந்திரா காந்தி? -நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த சர்ச்சை!!

03:05 PM Apr 11, 2024 IST | Mari Thangam
Advertisement

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தேர்தல் செலவுக்காக சுவிஸ் வங்கியில் இருந்து ரூ.60 கோடி பணத்தை எடுத்ததாக தகவல் வெளியான நிலையில், சுவிஸ் நாடாளுமன்றத்திலும் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement

சுவிஸ் வங்கியில் இருந்து ரூ.60 கோடியை இந்திரா காந்தி எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து விசாரிக்க சுவிட்சர்லாந்து அரசுக்கு இந்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. சுவிட்சர்லாந்தில் குற்றம் நடந்திருப்பதாலும், இந்திராகாந்தி, இந்திய குடிமகள் என்பதாலும், பணம் குறித்த கூடுதல் விவரங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் இந்திரா காந்தி 40 கோடியை திரும்பப் பெற்றதாக செய்திகள் வந்தன. அதனை தொடர்ந்து 60 கோடி ரூபாய் பெற்றதாக அந்நாட்டின் அப்போதைய பிரதமர் தெரிவித்தார். டிசம்பர் 1979ல், லக்னோவில் உள்ள ஹஸ்ரத் மஹால் பூங்காவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் சவுத்ரி சரண் சிங் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.

தேர்தலின் போது 10,000 ஜீப்புகள் வாங்க இந்திரா காந்தி மற்றும் சஞ்சய் காந்திக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று சரண் சிங் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் வேட்பாளருக்கு தலா ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு ஏராளமான பணம் வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இந்திராகாந்தி பணம் திரும்பப் பெற்ற விவகாரம் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.

Tags :
indira gandhi
Advertisement
Next Article