For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2024 IPL போட்டியுடன் முடிகிறது தோனியின் கிரிக்கெட் சகாப்தம்..!! ஓய்வு அறிவிப்பு..!!

04:30 PM Mar 22, 2024 IST | 1newsnationuser6
2024 ipl போட்டியுடன் முடிகிறது தோனியின் கிரிக்கெட் சகாப்தம்     ஓய்வு அறிவிப்பு
Advertisement

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2024இன் தொடக்கப் போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஐபிஎல் 2024 தொடக்கப் போட்டிக்கு முன்னதாக, புகழ்பெற்ற கேப்டன் எம்எஸ் தோனி தலைமைப் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்ததாகவும், அந்த பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்ததாகவும் சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது.

Advertisement

இந்நிலையில், 2024 ஐபிஎல் போட்டிக்கு பிறகு தோனி ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற போதும், ஐபிஎல்லில் மட்டும் தோனி விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்கி 5 முறை கோப்பையும் வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில், 2024 ஐபிஎல்லுக்கு பிறகு அவர் ஓய்வுபெற இருப்பதாகவும், இதனால் தான், சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜை நியமித்தார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Read More : மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி..!! பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்..!!

Advertisement