For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவாகரத்து வழக்கு: தனுஷ் ஐஸ்வர்யா நேரில் ஆஜராக உத்தரவு!

05:56 PM Apr 15, 2024 IST | Mari Thangam
விவாகரத்து வழக்கு  தனுஷ் ஐஸ்வர்யா நேரில் ஆஜராக உத்தரவு
Advertisement

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும்  விவாகரத்து வழக்கில், அக்டோபர் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ந் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி காந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு, இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர்.

இது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்சியில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து, இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தள்ளி வைத்து,  இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement