முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குஷ்புவின் இல்லம் அருகே நாளை ஆர்ப்பாட்டம்..!! காங்கிரஸ் அறிவிப்பு..!!

01:19 PM Nov 27, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பட்டியல் சமூக மக்கள் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுத்த குஷ்புவை கண்டித்து நாளை ஆர்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநிலத் தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குஷ்புவின் ட்விட்டர் பதிவுக்கு ஒரு நபரின் பதிலை விமர்சன ரீதியாக எதிர் கொள்ள முடியாமல் எனக்கு உன்னை மாதிரி சேரி மொழி பேச தெரியாது என்று பொது வெளியில் பேசிட்டு, வருத்தம் தெரிவிக்க சொன்னா முடியாது அப்படி தான் பேசுவேன் என்று ஆணவத்தில் பேசி கொண்டு இருக்கிறார்.

சேரியிலிருந்து பல ஜனாதிபதிகளும், முதல்வர்களும், சபாநாயகர்களும், சட்டம் இயற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்று பல ஆளுமைகள் உருவான பிறகும் அந்த பகுதிக்குனு ஒரு அடையாளம், அந்த மக்களுக்கு என்று ஒரு அடையாளம் அந்த மொழி நம்ம பேசுற மொழி இல்லை. அது ரொம்ப இழிவான கேவலமான மக்கள் பேசுற மொழி என்று இந்த நாகரிக சமூகத்திலும் தொடர்ந்து நான் அதை அடையாள படுத்துவேன் என்கிற குஷ்புவின் ஆணவம் தான் இங்கே கேள்வி குறி?

கடந்த சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்பு குறிப்பிட்ட சமூக மக்கள் 30% வாழும் பகுதி. ஓட்டுக்காக அவர்களை கட்டிபிடித்து அவங்க வீட்டு தண்ணீரை குடித்த குஷ்புக்கு அவங்க மொழி மட்டும் இப்ப அருவெறுப்பாக தெரிகிறதா..? எவ்வளவு சமூக முன்னேற்றமும் பொருளாதார தன்னிறைவு அடைந்தாலும் அம்மக்களை என்றும் பொது சமூகத்தில் இருந்து அடையாளப்படுத்தி விலக்கி தான் பார்ப்பேன் என்று சூளுரைக்கும் குஷ்புக்கள் வேரறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, கருவறுக்கப்பட வேண்டியவர்கள்.

இவரை போன்றோர் பொது சமூகத்தோடு பொருந்தி வாழ தகுதி அற்றவர்கள் என்பதை புரிய வைக்க பெரும் மக்கள் திரட்சியுடன் கூடிய ஆர்பாட்டம் நாளை செவ்வாய்கிழமை குஷ்புவின் இல்லம் அருகே நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
காங்கிரஸ்குஷ்பு
Advertisement
Next Article