For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'நெல்லையை அதிர வைத்த தீபக் ராஜா கொலை!' - உடலை வாங்க பெற்றோர் சம்மதம்..!

12:01 PM May 27, 2024 IST | Mari Thangam
 நெல்லையை அதிர வைத்த தீபக் ராஜா கொலை     உடலை வாங்க பெற்றோர் சம்மதம்
Advertisement

மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 20 ஆம் தேதி அன்று தன் காதலி மற்றும் அவர்களது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். லெப்ட் முருகன், நவீன் உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியும் வரையில் தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரின் உறவினர்கள் கூறிவந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு , காவல்துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து இன்று தீபக் ராஜா உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரித்துள்ளனர்.

தீபக் ராஜாவின் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட இருப்பதால் அவர் உடலை கொண்டு செல்லும் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் உடல் செல்லும் வழியில் உள்ள கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களை சிறிது நேரம் மூடவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read More ; இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! உங்கள் கணக்கு மூடப்படுகிறது..!!

Tags :
Advertisement