For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வடமாநில ஊழியர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க முடிவு..!! தெற்கு ரயில்வே மாஸ்..!! பயணிகள் மகிழ்ச்சி..!!

07:34 AM May 11, 2024 IST | Chella
வடமாநில ஊழியர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க முடிவு     தெற்கு ரயில்வே மாஸ்     பயணிகள் மகிழ்ச்சி
Advertisement

தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநிலங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் பயிற்றுவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பொதுவாக ரயில்வே துறையை எடுத்துக் கொண்டாலே பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இதில் பணிபுரிவார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பணிப்புரிகின்றனர். இதனால் பணிகளுக்கும், ஊழியர்களுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது. குறிப்பாக முன்பதிவு செய்யும் போது ஏராளமான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

அதேபோல் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர்களிடையேயும் மொழி பிரச்சனையால் தகவல் தொடர்பு என்பது முழுமையானதாக இல்லாமல் இருக்கிறது. ஆகையால், இந்த பிரச்னைகளை சரி செய்ய தெற்கு ரயில்வே ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது வட மாநில ஊழியர்களுக்கு அவர்கள் எந்த மாநிலத்தில் பணி செய்கிறார்களோ அந்த மாநிலத்தின் மொழியை சொல்லிக்கொடுப்பது என தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. இது குறித்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், ”தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பணிபுரியும் பல ஊழியர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே, அவர்களால் உள்ளூர் மொழிகளில் பேச முடிவதில்லை. இதை உணர்ந்த தெற்கு ரயில்வே தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய மொழிகளில் பணிபுரியும் அறிவைப் பெறுவது அவசியம். இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும் என்று கருதுகிறது. எனவே, அனைத்து துறைகளின் தலைவர்கள், பணிமனைகள், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு பிராந்திய மொழி கற்றலுக்கான பயிற்சித் தொகுதியை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறது. இவர்கள் அனைவரும் பயிற்சி திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

'கர்மயோகி' மின்-கற்றல் தளத்தின் கீழ் இதற்கான கன்டென்ட்கள் உருவாக்கப்படும். அதேபோல இந்திய அரசின் கல்வி அமைச்சகம், 'MyGov' இந்தியாவுடன் இணைந்து உருவாக்கிய 'பாஷா சங்கம்' எனும் மொபைல் செயலியையும் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டிக்கெட் முன்பதிவு செய்யும் ஊழியர்கள், பயண டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் கேட்டரிங் ஊழியர்கள், லோகோ பைலட்டுகள் ஆகியோருக்கு பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Read More : இந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா..? இனி பயன்படுத்த முடியாது..!! வெளியான அறிவிப்பு..!!

Advertisement