முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த வழக்கிற்கே மரண தண்டனையா..? குற்றவாளி மீதான குற்றம் என்ன..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

05:31 PM Apr 11, 2024 IST | Chella
Advertisement

வியாட்நாம் நீதிமன்றம் பல பில்லியன் டாலர் பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ட்ரோங் மி லானுக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

வியட்நாமின் முன்னணி நிறுவனமான 'வான் தின் பாட்' தலைவர் 67 வயதான ட்ரோங் மி லான், அபகரிப்பு, ஊழல் மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. மரண தண்டனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுக 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.

வியட்நாமின் முன்னணி வணிக வங்கியான எஸ்சிபி வங்கியைச் சட்டத்திற்கு விரோதமாக 2012 - 2022 வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்களுக்கு வங்கியின் மூலம் கடன் வழங்கியதாகவும் 86 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்ததாகவும் இந்த குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. கம்யூனிச நாடான வியட்நாமில் 2016 முதல் ஊழலுக்கு எதிராக நடைபெற்று வரும் நடவடிக்கைகளில் லான் தொடர்புடைய வழக்கு மிகப்பெரிய பண மோசடியாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த நாட்டின் நிகர வருவாயான ஜிடிபியின் 3 சதவிகிதத்துக்கு நிகரான ஊழல் நடந்துள்ளது. லான் உடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்ட 84 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறைத் தண்டனை வரை நீதிமன்றம் விதித்துள்ளது. லானின் கணவர் ஹாங்காங் முதலீட்டாளர் எரிக் சு நப்-கீ குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். எஸ்சிபி வங்கியில் இருந்து போலியான நிறுவனங்களை அமைக்க உதவியுள்ளார். லானின் மருமகன் ட்ரோங் ஹுயு வானும் இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதுபோன்ற பண மோசடி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது மிக அபூர்வமானது.

Read More : இளம் வயதிலேயே தரமான சம்பவம்..!! விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்..!!

Advertisement
Next Article