முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காங்கிரஸ் நிர்வாகி மரணம்…துப்பு துலக்கிய போலீஸ்…விசாரணை வளையத்திற்குள் வரும் முக்கிய புள்ளி..!!

05:47 AM May 08, 2024 IST | Baskar
Advertisement

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பான வழக்கில் புது புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியைும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது கொலைதான் என்பதற்கான விஷயங்களும் காவல்துறைக்கு துப்பு துலங்கியுள்ளது.

Advertisement

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை
வெளியாகியுள்ளது.இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்.

ஜெயக்குமார் மரணம் திட்டமிட்ட கொலை?

இந்த நிலையில், ஜெயக்குமாரின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல் வைத்து கட்டப்பட்டிருந்ததாகவும், கழுத்து, கை மற்றும் கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டுள்ளதும் மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு காரில் கொண்டுவந்து தோட்டத்தில் போட்டதாக புதிய தகவலும் வெளியாகியுள்ளது.இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, ஜெயக்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலைதான் என்ற கோணத்திற்கு போலீசார் வந்துள்ளனர்.

Read More: சீனா : காதலர்களை தாக்கும் ‘Love Brain Disorder’ என்ற புதிய நோய் கண்டுபிடிப்பு!

Tags :
காங்கிரஸ்நிர்வாகிஜெயக்குமார்கொலைஜெயக்குமார்தனசிங்
Advertisement
Next Article