For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உயிருக்கே ஆபத்து..!! தூங்கும்போது குறட்டை வருகிறதா..? இந்த நீரை மட்டும் ஆவி பிடித்தால் போதும்..!!

05:20 AM Apr 14, 2024 IST | Chella
உயிருக்கே ஆபத்து     தூங்கும்போது குறட்டை வருகிறதா    இந்த நீரை மட்டும் ஆவி பிடித்தால் போதும்
Advertisement

உங்களுக்கு தூங்கும்போது, குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? அப்படி என்றால், இந்த நீரை ஆவி பிடித்தால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்.

Advertisement

குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். பெண்களை விட ஆண்கள் தான் அதிக சத்தத்துடன் குறட்டை விட்டு தூங்குவார்கள். குறட்டை விட்டு தூங்குபவர்களால் அவருக்கு அருகில் உறங்கும் நபர்களுக்கு தான் தூக்கம் தொலைகிறது. குறட்டை விடுவது சாதாரண ஒன்று தான், இது உடல் அசதியால் ஏற்படக் கூடியவை என்று நினைத்தால் உங்கள் எண்ணம் தவறானது. உண்மையில் உடல் அசதியால் குறட்டை வருவதில்லை. அவை சுவாசித்தலில் தடை ஏற்படும்போது, வருகிறது.

நாக்கை உள்வாங்கி கொண்டு தூங்கும்போது, குறட்டை வருகிறது. உடல் பருமனாக இருந்தால் குறட்டை வர வாய்ப்புள்ளது. அதிகளவு குறட்டை விட்டு உறங்கும் பொழுது சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு அவை உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கி விடும். எனவே, குறட்டையை சாதாரணமாக நினைக்காமல் விரைவில் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதற்கு மருத்துவரை நாடத் தேவை இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள் :

தண்ணீர்

மஞ்சள்

புதினா எண்ணெய்

செய்முறை :

* அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சூடாக்கி அடுப்பை அணைக்கவும்.

* பிறகு இதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் 2 சொட்டு புதினா எண்ணெய் விட்டு இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஆவி பிடிக்கவும்.

* இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் குறட்டை விடுவதில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்கும்.

Read More : ”ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதே செல்வகணபதி தான்”..!! எடப்பாடி பழனிசாமி ஒரே போடு..!!

Advertisement