For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரபல நடிகை செய்த காரியத்தால் வீட்டை விட்டு வெளியேறிய தந்தை..!! நளினி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..?

Not all heroines in Tamil cinema can stay in the cinema for long.
11:17 AM Aug 13, 2024 IST | Chella
பிரபல நடிகை செய்த காரியத்தால் வீட்டை விட்டு வெளியேறிய தந்தை     நளினி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா
Advertisement

தமிழ் சினிமாவில் அனைத்து கதாநாயகிகளாலும் வெகுநாட்கள் சினிமாவில் இருக்க முடிவதில்லை. ஏனென்றால், கதாநாயகர்கள் அளவிற்கு கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் இருப்பதில்லை. இதனாலேயே கதாநாயகிகள் சீக்கிரமாகவே வாய்ப்பை இழந்து விடுகின்றனர். அப்படி சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் நளினி. இவர், டி.ஆர் இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

அதன் பிறகு விஜயகாந்த் மாதிரியான பெரும் நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நளினி. சினிமாவில் பெரும் நடிகையான நளினி, நடிகர் ராமராஜனை திருமணம் செய்துக்கொண்டார். சில நாட்களில் சினிமாவில் வாய்ப்பை இழந்த நளினி பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவ்வளவு வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் கூட ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகளை பெற வெகுவாக கஷ்டப்பட்டார் நளினி. முக்கியமாக அவரது குடும்பத்தாருக்கே அவர் சினிமாவுக்கு செல்வது பிடிக்கவில்லை.

எனவே, நளினி சினிமாவிற்கு செல்ல இருப்பதை அறிந்த அவரது அப்பாவும், அண்ணனும் வீட்டை விட்டே வெளியேறிவிட்டனர். இருந்தாலும் நளினியின் அம்மா நளினிக்கு மிக ஆதரவாக இருந்தார். என்ன ஆனாலும் நளினியை கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். இந்த விஷயத்தை நளினியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Read More : ஆசிரியர்கள் எத்தனை மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும்..? எவ்வளவு நேரம் பள்ளிகள் இயங்க வேண்டும்..? விளக்கம் இதோ..!!

Tags :
Advertisement