முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொடூரம்!. காதல் விவகாரத்தில் மகளின் தலையை கோடரியால் வெட்டி உடலை 6 துண்டுகளாக வெட்டிய தந்தை!.

BRUTAL MURDER! Father beheads daughter with axe, chops body into 6 pieces over love affair in Uttar Pradesh
06:00 AM Sep 04, 2024 IST | Kokila
Advertisement

Murder: உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில், ஒரு நபர் தனது மகளின் தலையை துண்டித்து, உடலை கோடரியால் 6 துண்டுகளாக வெட்டிய கொடூரமான கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மோதிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லக்ஷ்மன்பூர் மாதேஹி பஞ்சாயத்தின் மிஹிம்பூர்வா கிராமத்தை சேர்ந்தவர் நயீம் கான். இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்தநிலையில், மகள், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி, காதலனுடன் சென்றதாகவும், அதிகாரிகள் அவளை மீட்டு, அவளிடமிருந்து விலகி இருக்குமாறு பையனுக்கு அறிவுறுத்தினர், ஆனால் அந்த உறவு தொடர்ந்ததால் தந்தை நயீமின் கோபத்தில் இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று காதலியை பார்க்க இளைஞர் வந்ததாகவும், இருவரையும் நேரில் பார்த்ததும் ஆத்திரமடைந்த நயீம், தனது மகளை கோடரியால் வெட்டி கொன்றார். பின்னர் சிறுமியின் உடலை 6 துண்டுகளாக வெட்டி கொடூரமான கொலை செய்துள்ளார். சிறுமியின் தாயின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட தந்தை மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Readmore: எழுத்துகள் தெரியவில்லையா?. இனி கண்ணாடி தேவை இல்லை!. புதிய கண் சொட்டு மருந்துக்கு ஒப்புதல்!.

Tags :
Daughter Murderfatherloveup
Advertisement
Next Article