For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அலோபதி மருந்தால் கோடிக்கணக்கான மக்கள் பலி!. சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்!

Baba Ramdev Slams Allopathy Immediately After SC Closes Contempt Case; Internet Is Appalled
06:10 AM Aug 16, 2024 IST | Kokila
அலோபதி மருந்தால் கோடிக்கணக்கான மக்கள் பலி   சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்
Advertisement

Baba Ramdev: அலோபதி மருந்தை சாப்பிட்டு கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாக பாபா ராம்தேவ் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

புகழ்பெற்ற கறுப்புப்பணப்புகழ் சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் நவீன மருந்து களுக்கு எதிராக தவறான விளம் பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்ற்த்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. பதஞ்சலி நிறுவன வழக்குரைஞர் சட்டத்தை மீறி செயல்படமாட்டோம் என உறுதி அளித்த பிறகும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் வெளியாகியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் விளம்பரம் அளிக்க பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் மன்னிப்பு கோரி பாபா ராம்தேவ் தரப்பில் நாளிதழ்களில் விளம்பரம் அளிக்கப்பட்டது. மீண்டும் இந்த வழக்கு விசார ணைக்கு வந்தபோது தவறான விளம் பரங்களை வெளியிட மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் உத்தர வாதம் அளித்தது.

உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவத்தின் உத்தரவாதத்தை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டது. இந்தநிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாபா ராம்தேவ், அலோபதி மருந்தை சாப்பிட்டு கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாக கூறியுள்ளார். இதனால் சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக ராம்தேவை விமர்சித்து வருகின்றனர்.

Readmore: பெரிய தொகை கொடுத்து இதை வாங்கப் போறீங்களா..? அப்படினா இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..!!

Tags :
Advertisement