For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு..!! நீதிபதி அல்லி உத்தரவு..!!

06:03 PM Jan 22, 2024 IST | 1newsnationuser6
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16 வது முறையாக நீட்டிப்பு     நீதிபதி அல்லி உத்தரவு
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 16-வது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15-வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14ஆம் தேதி கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து, ஜனவரி 29ஆம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement