For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளச்சாராய மரணம்..!! மீண்டும் மறுப்பு..!! அதிமுக அட்ராசிட்டி..!! கடுப்பான சபாநாயகர்..!! அதிரடியாக வெளியேற்றம்..!!

All the AIADMK MLAs who were protesting in the assembly demanding a discussion on the death of Kallakurichi Kallacharaya were escorted out by the security guards following the order of Speaker Appa.
10:20 AM Jun 25, 2024 IST | Chella
கள்ளச்சாராய மரணம்     மீண்டும் மறுப்பு     அதிமுக அட்ராசிட்டி     கடுப்பான சபாநாயகர்     அதிரடியாக வெளியேற்றம்
Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில் இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சபாநாயகர் அப்பாவு உத்தரவை தொடர்ந்து அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

Advertisement

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு மக்களவைத் தேர்தல் காரணமாக பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக கடந்த 20ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று காலை 9.30 மணிக்கு 5-வது நாளாக தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் தொடங்கியது. ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். அதனை கடுமையாக கண்டித்த சபாநாயகர் அப்பாவு, அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

Read More : மக்களே..!! இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! கஷ்டம் மேல கஷ்டம் வரும்..!! கவனமா இருங்க..!!

Tags :
Advertisement