முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பருத்திவீரன் விவகாரம்..!! மனப்பூர்வமாக மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன்..!! தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..!!

11:31 AM Nov 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பருத்தி வீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement

பருத்திவீரன் திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஞானவேல்ராஜா முன்வைத்து பேசினார். இந்த விவகாரத்தில் நான் பயன்படுத்திய வார்த்தைகள் அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் 'அமீர் அண்ணாவிடம்' வருத்தம் தெரிவித்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 'பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்று தான் நான் குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி..! அன்புடன் ஞானவேல்ராஜா' எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
அமீர்ஞானவேல் ராஜாநடிகர் கார்த்திபருத்திவீரன்
Advertisement
Next Article