முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விபச்சார புரோக்கரை கடத்திய போலீஸ்காரர்கள்..!! பதறியடித்து வந்த மனைவி..!! நடந்தது என்ன..?

The police also found out that the kidnapped prostitution broker was monitoring the prostitution business in Salem, Dharmapuri and Namakkal, Rasipuram through the internet and tried to extort money through it.
12:42 PM Aug 24, 2024 IST | Chella
Advertisement

திருப்பூர் மாவட்டம் கோவில்வழியைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், பெருமாநல்லூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனது கணவரை 6 பேர் கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அதில் சிலர் காவல்துறை சீருடையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான விசாரணையில், கடத்தப்பட்ட நபர், விபச்சார புரோக்கர் என்பது தெரியவந்தது.

Advertisement

இதையறிந்த 3 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர், விபச்சார தொழில் குறித்து வெளியே சொல்லாமல் இருக்க தங்களுக்கு ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும் எனக்கூறி தாக்கியதுடன், கடத்திச்சென்றதும் தெரியவந்தது. விபச்சார புரோக்கரை கடத்தி பணம் பறிக்க முயன்ற போலீஸ்காரர்கள் சோமசுந்தரம் (31), கோபால்ராஜ் (33), நீலகிரி மாவட்டம் தேவாலா சோலூர் மட்டத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் லட்சுமணன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்களின் நண்பர்கள் ஜெயராம் (20), ஹரீஸ் (25), அருண்குமார் (24) ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.

கைதான 3 போலீஸ்காரர்களும் கடந்த 2011ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட விபச்சார புரோக்கர் மூலம் சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல், ராசிபுரத்தில் இணைய தளம் மூலம் நடந்து வந்த விபச்சார தொழில் குறித்து கண்காணித்து, அதனை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : ’மொட்டை கிருஷ்ணனிடம் உங்கள் மனைவி அடிக்கடி போனில் பேசியது ஏன்’..? இயக்குனர் நெல்சனிடம் தீவிர விசாரணை..!!

Tags :
திருப்பூர் மாவட்டம்போலீசார் விசாரணை
Advertisement
Next Article