For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சர்ச்சை பேச்சு..!! மகா விஷ்ணு அதிரடி கைது..!! ரகசிய இடத்தில் வைத்து விசாரணை..?

Controversial spiritual speaker Maha Vishnu was arrested by Saidapet police at Chennai airport.
03:57 PM Sep 07, 2024 IST | Chella
சர்ச்சை பேச்சு     மகா விஷ்ணு அதிரடி கைது     ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
Advertisement

சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளரான மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

Advertisement

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், மகா விஷ்ணு மாணவியர் முன்னிலையில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதற்கிடையே, அப்பள்ளியின் மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகா விஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பேசிய அன்பில் மகேஷ், மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சியினரும் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிட்னியில் இருந்து விசாரணைக்கு சென்னைக்கு வருவதாக மஹா விஷ்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பின்னர், ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று பிற்பகல் சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Read More : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றது..!! தமிழ்நாட்டில் சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

Tags :
Advertisement