முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் வீடு, அலுவலகங்களில் அதிரடி ரெய்டு..!! போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!!

Action raid on Mahavishnu's house and offices
01:56 PM Sep 12, 2024 IST | Chella
Advertisement

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Advertisement

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். இதுதொடர்பாக அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் சங்கருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ படு வைரலானது.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மகாவிஷ்ணு மீது மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கடந்த 7ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

மகாவிஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்ற போலீசார், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : செம குட் நியூஸ்..!! ஆதாரை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tags :
சைதாப்பேட்டைநீதிமன்றம்மகாவிஷ்ணு
Advertisement
Next Article