For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடரும் ரெட் அலர்ட்..!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

04:38 PM Dec 18, 2023 IST | 1newsnationuser6
தொடரும் ரெட் அலர்ட்     நாளை பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Advertisement

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி அதி கனமழை பெய்து வருகிறது.

இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும், அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போல காட்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கனமழை, தென்மாவட்டங்களில் நாளை வரை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags :
Advertisement