முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடரும் ரயில்நிலைய கொலைகள்..!! பட்டப்பகலில் அண்ணனை குத்திக்கொன்ற தம்பி..!! பயணிகள் அச்சம்..!!

04:17 PM Nov 24, 2023 IST | 1newsnationuser6
Advertisement

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் மின்சார ரயில் ஒன்று பயணிகளுடன் சென்ட்ரல் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அந்த ரயிலில் முரளி (44) என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அதே ரயில் பெட்டியில் பயணித்த ரவீந்தர் (38) என்ற வாலிபர் முரளியை சரமாரி கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

Advertisement

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து சென்று ரவீந்தரை கைது செய்தனர். பின்னர் உயிருக்கு போராடிய முரளியை மீட்டு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முரளியை பரிசோதித்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

பின்னர், ரயில்வே போலீசார் முரளியின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.‌ முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட முரளியும், பிடிப்பட்ட ரவீந்தரனும் அண்ணன், தம்பி என்பதும் சொத்துத் தகராறில் அண்ணனை கொன்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக ரவீந்தரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
காவல்துறை விசாரணைதிருவள்ளூர் மாவட்டம்
Advertisement
Next Article