முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருச்சி: தொடர் பைக் கொள்ளை.! 2 பேரை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்.!

07:22 PM Jan 06, 2024 IST | 1newsnationuser7
Advertisement

திருச்சி பகுதியில் தொடர்பாகண திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களாக தொடர்பாக நான் திருட்டு நடைபெற்று வந்தது.

Advertisement

தங்களது வாகனங்களை திருடு கொடுத்த பல்வேறு மக்களும் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இது தொடர்பாக காவல்துறையினரும் நகர் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.

அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது . இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் திருச்சி மாநகர் முழுவதும் தொடர்பை கொள்ளையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காவல்துறையின் விசாரணையில் அவர்கள் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த சபி மற்றும் அபு என தெரியவந்திருக்கிறது. அவர்களிடமிருந்து காவல்துறையினர் 16 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியுள்ளனர்.

Tags :
bike theftcrimeTamilnaduTrichyTwo Arrested
Advertisement
Next Article