For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"போறது உல்லாச யாத்திரை.., வாய தொறந்தாலே.."! பாஜக அண்ணாமலையை கடுமையாக சாடிய கே.எஸ் அழகிரி.!

09:21 PM Jan 06, 2024 IST | 1newsnationuser7
 போறது உல்லாச யாத்திரை    வாய தொறந்தாலே     பாஜக அண்ணாமலையை கடுமையாக சாடிய கே எஸ் அழகிரி
Advertisement

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை உல்லாச பயணம் மேற்கொண்டு தனது வாயில் வரும் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கும் அவர் தமிழகத்தின் நிதிநிலைமை பற்றிய போலியான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார். ஆதாரம் இன்றி அவதூறுகளை பரப்புவதையே அண்ணாமலை வேலையாக வைத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இரண்டு வருடங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என பொய்யான பரப்புரையை அண்ணாமலை தொடர்ந்து பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழக நிதிநிலையை பேசுவதற்கு முன் மத்திய அரசின் கடன் எவ்வளவு இருக்கிறது என்பதை அண்ணாமலை பேச வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது 58 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 153 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இது நடப்பு ஆண்டில் 169 லட்ச கோடியாக உயரும் எனவும் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்வாக சீர்கேட்டால் இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை அண்ணாமலை முதலில் பேச வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதயாத்திரை என்ற பெயரில் உல்லாச யாத்திரை செல்லும் அண்ணாமலை அவதூறுகளை பரப்புவதை தான் தனது யாத்திரையின் நோக்கமாக வைத்திருக்கிறார் எனவும் தெரிவித்திருக்கிறார். பத்திரிக்கை காரர்கள் மைக்கை நீட்டுவதால் என்ன வேண்டுமானாலும் பேசி விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என நினைக்கிறார். ஆனால் மக்கள் மத்தியில் அதற்குரிய பதிலை அவர் கூறியே ஆக வேண்டும் எனவும் கடுமையாக தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement