குழப்பம், குளறுபடி..!! தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு..? வெளியான ஷாக்கிங் தகவல்..!!
18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நேற்று முதல் கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்பாக வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் மிகப்பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின் 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்டது. இதனால், பல தொகுதிகளில் 5-10% வரை வாக்கு வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியினரை சந்தேகமடைய செய்துள்ளதால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்க வாய்ப்புள்ளது.
Read More : குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஜங்க் ஃபுட்..!! இவ்வளவு ஆபத்தா..? பெற்றோர்களே உஷார்..!!