முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

6 ஆண்டு முன் பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகார்...! சவுக்கு சங்கர் மீது பாய்ந்த அடுத்த வழக்கு...!

05:50 AM May 09, 2024 IST | Vignesh
Advertisement

சிறையில் அடைக்கப்பட்ட யூடியூபர் 'சவுக்கு' சங்கர் மீது சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு செவ்வாய்கிழமை இரண்டு வழக்குகளை பதிவு செய்தது, ஒன்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், மற்றொன்று சமீபத்திய வழக்கின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

6 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக சவுக்கு இணையதளத்தில் அவதூறான கட்டுரையை வெளியிட்டதாக புகார் அளித்தார். செவ்வாயன்று, சென்னை மாநகர சைபர் கிரைம் பிரிவு IPC இன் பிரிவுகள் 294 (b) (ஆபாசம்), 354 D (பின்தொடர்தல்), 506 (i) (கிரிமினல் மிரட்டல்), 509 (பெண்களை அவமதிக்கும் நோக்கம்) மற்றும் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அது மட்டுமின்றி பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் முன்னேற்றப் படையின் நிறுவனரும் தலைவருமான வீரலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சங்கர் மீதும், மற்றொரு யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு வழக்குகளிலும் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த வாரம், யூடியூப்பில் ஒரு நேர்காணலின் போது காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக சங்கர் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை தேனியில் இருந்து ஏற்றிக்கொண்டு கோவைக்கு செல்லும் வழியில் அவர் கொண்டு செல்லப்பட்ட வாகனம் சிறிய விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அவர் தங்கியிருந்த அறையில் அரை கிலோ கஞ்சாவை போலீஸார் கண்டுபிடித்ததை அடுத்து, தேனி மாவட்ட போலீஸாரும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில், கோவை சிறையில் சிறைக் காவலர்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாக சங்கரின் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார், மேலும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறினார். இந்த குற்றச்சாட்டை தமிழக சிறைத்துறை மறுத்துள்ளது.

Tags :
Sandhya Ravi SankarSavukuSavuku arrestSavuku Sankar
Advertisement
Next Article